Posts

இறைவன் ஒருவனே !

Image
எங்கு இருக்கிறாய் என்பார் விஞ்ஞான மேதை எங்கும்  இருக்கிறாய் என்பார் மெய்ஞான மேதை எங்கும் இல்லை என்பார் அறியாமை பேதை  நீ படைத்த மனிதனுக்கு பலவித பெயர் நீ இன்றி அசையாதோ  உலகத்தில் உயிர் நினைப்பது எல்லாம் நடந்தால் உனக்கேது பேர் உன் அருளோ ஜாதி , மதம், பேதம் கடந்தது உன்னையும் பிரிப்பது மனிதனின் முட்டாள் தனமானது உண்மை அறிந்தேன் "கடவுள் ஒருவனே "என்று புரிந்தது உன்னை என்னில் ஏழுத வைத்ததும் நீயே என விளங்கியது                              --   பிரவீணா  தங்கராஜ் .

மழலை மொட்டே !

Image
கொஞ்சும் மழலை பேச்சு பிஞ்சு பொன் விரலின் பஞ்சு தன்மை தன்னிலை உணரா நிலையில் தத்தி நடக்கும் பாதம் நடைப்பழகும் தங்க தேரே கை விரல் நீ கடிக்க வலிக்காது உன் பற்களின் வளர்வை கண்டு சிரிக்கும் மழலை மொட்டே! உன் அழுகையும் அழகு தான் பொம்மை வைத்து விளையாடும் கரும்பே! சுட்டி தனம் செய்யும் உன் குறும்பு உன்னிலை உணராது உறங்கையிலே தாயின் மனம் இரசிக்கும் உன்னையே! இப்படியே இருந்து விட கூடாதா? என என்னையும் ஏங்க செய்து வையகம் மறக்க செய்கிறதே !                                -- பிரவீணா  தங்கராஜ் . *ஜனவரி 16 -2009-இல் " ராணி முத்து " இதழில் சுருக்கமாக பிரசுரிக்கப்பட்டது .

வினோத கணக்கு

இருபது வருடத்தினை விட இரண்டு நிமிடம் பெரியது காதலில் மட்டும் .              --  பிரவீணா தங்கராஜ் .

கால சுழற்ச்சி

இமைகளின் திறப்பால் இரவு விடியாது .        --   பிரவீணா  தங்கராஜ் .

பொம்மை கூற்று

"பொம்மை ஒன்று சொன்னது" நானிலம் தேடினாலும்  என் மழலை தாய் போல் இல்லை  மலர் பாதத்தால் மிதிப்பாள் ஒற்றை விரலால் குடைந்து ஒரு விழியை பிதுக்குவாள் சிக்கிய சிகையின  சிங்காரமாக அலங்கரிபாள் எச்சி ஒழுகிய நிலையில் முத்தம் நூறு தருவாள் கண் , மூக்கு என வாயை தவிர  முகத்தில் சாதம் ஊட்டுவாள் "பொம்மை ஒன்று சொன்னது"   நானிலம் தேடியும்  என் மழலை தாய் போல் இல்லை                      --  பிரவீணா  தங்கராஜ்  .

மழைக்காதல்

Image
பூமிப் பெண்ணை  வானம் காதலிக்க  மேகம் என்ற  கருமை கொடூரன் தடுக்க  இடி , மின்னல் கொண்டு  ஓர் யுத்தம் நடக்க  மழையாக வந்து  பூமியை கைப்பிடித்தானோ !                  --  பிரவீணா  தங்கராஜ் .

நேர்மையை பயிரிடு

Image
                                  நேர்மையை பயிரிடு                                                          இன்று ஞாயிறு என கடற்கரை கூட்டம் சொல்லாமல் சொல்லியது. கதிரவனுக்கு வேலை தொடங்கும் நேரம். இன்று அவனது பஜ்ஜி கடையில் கூட்டமும் அதிகம். ஓரமாக தன் மகன் சிவானந்தம் எனும் சிவா விளக்கு ஓளியில் படித்திருக்க, கதிரவனுக்கு உதவியாக மனைவி கயல் வேலையில் செயல்பட்டாள்.                              அப்பொழது அங்கே வந்த பரணி புன்னகை புரிந்தவரே ,                  '' அண்ணே ! எனக்கு ஒரு பிளேட் பஜ்ஜி '' என்றான் . பரணி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த மக்களில் ஒருவன் அல்ல, மக்கள் ஏமாறும் போது அவர்களது உடமையை திருடும் குணம் உடையவன்.  இது கதிரவனுக்கும் தெரியும்.                                பரணியின் முதல் சந்திப்பு அவனது குணத்தை உறுதி படுத்தவில்லை. முதலில் அவனது வருகை  வேலை தேடி வரும் இளைஞனின் ஒருவனாக தான் சென்னைக்கு வந்தான். சென்னை வந்தவரை வாழா வைக்கும் அல்லவா? ஆனால் அந்த வாழ்வில் தான் எத்தனை? எத்தனை? கீழே விழும் நெல்லிக்காயை கூறு கட்டினால் பணம் . குப்பைமேனி கூட கூறு கட்டி சளிக்கு ஏற்

நீர்

Image
உணவுக்கு அரசியே ! நீர் நீ அல்லவா !  தீயினை தனிக்க வந்தவளே !  நீர் நீ அல்லவா ! தரணி எங்கும் செழிப்பை தர  தன்னை தருபவளே ! நீர் நீ அல்லவா ! அகிலத்தின் முப்பகுதி ஆள்பவளே !  நீர் நீ அல்லவா ! காலத்தின் கட்டாயத்தினால்  ஆண்டவன் அன்பாய்  அருளும் மழையும்   நீர் நீ அல்லவா !  பூமியில் மறைந்து  புதுமைதனை செய்து  புரட்சி புரிபவளே ! நீர் நீ அல்லவா ! மலைகளின் மகுடத்திலிருந்து  மண்ணில் தவழ  வரும் நதியே !  நீர் நீ அல்லவா !   --  பிரவீணா  தங்கராஜ் .

பனித்துளி

Image
புல்வெளி முகத்தில் பருக்கள் அதை நீக்க  தான் மஞ்சள் சூரியன் வந்ததோ !                --  பிரவீணா  தங்கராஜ் .

கண்ணாமூச்சி

கரை தொடும் வெற்றி வீரனாக , அலை . "ஒ " அதனால் தான் நுரை சிரிப்பு பொங்கி வழிகிறதோ !             -- பிரவீணா  தங்கராஜ்.