தமிழ் மகளே ...!
தமிழ் மகளே ... உனக்கு மரபு கவிதையெனும் சேலைக் கட்டவே துடிக்கின்றேன் முடியவில்லை 'சல்வார்' , 'சோளி' போல புதுக்கவிதை , வசனக்கவிதையே அணிவிக்கின்றேன் . ஹைக்கூ-யெனும் அணிகலன்களையும் மாட்டிவிடுகின்றேன் இதுவும் உனக்கு அழகு சேர்க்கத் தான் செய்கின்றது . எதுகை, மோனை, இயைபுவென சில நேரத்தில் அணிகலன்களாக மெருகேற்ற அணிவித்தாலும் மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீரென அணிகலன் புகட்டவே ஆசையெனக்கு என்றாவது ஒருநாள் உனக்கு மரபு கவிதை அணிவித்து வெண்பா அணிகலன் பூட்டி அழகுப் பார்ப்பேன் என் தமிழ் மகளே... என்னுள் ஞானவொளி ஏற்று . -- பிரவீணா தங்கராஜ் .