சின்ன சின்ன குடில்கள் எங்கே ? ஸ்வரமாய் இசைக்கும் கீச்சுக்குரல் எங்கே ? நெல்மணியை அலகில் கொத்தி சிறகையடிக்கும் தூக்கனாங் குருவி எங்கே ? அது சரி நெற்கதிர் தான் எங்கே ? சாணம் கரைத்து தெளித்த வீடு எங்கே ? நீரைக் கலக்காத பசும்பால் எங்கே ? மந்தை மந்தையாய் புற்கள் மேயும் மாட்டு கூட்டம் தான் எங்கே ? அது சரி நீர் தான் எங்கே ? சிலுசிலுவென வீசும் தென்றல் எங்கே ? நெடுஞ்சாலையில் நிழல்தந்த மரங்கள் எங்கே ? மரத்தின் வேரை பிடியாக பிடித்த மண் எங்கே ? மண்ணின் தோழன் மண்புழு எங்கே ? அது சரி நிலம் தான் எங்கே ? விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே நீரைப் பறித்தாய்... நிலத்தைப் பறித்தாய்... வாழும் நிலத்தின் வளத்தைப் பறித்தாய்... போராட்டம் அது மட்டும் வாழ்வில் எதற்கு ? நாளை சரித்திரம் சொல்வதென்ன ? தமிழ் எங்கே ? தமிழ் மொழி எங்கே ? தரணியில் திமிர் பிடித்த தமிழன் எங்கே ? கவிகள் மட்டும் பல தந்து சென்றான ? அது சரி மனித நேயம் எங்கே ? தமிழ் நாடு எங்கே ? என்று கேட்டு புலம்பவா ? விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே . -- பிரவீணா தங்கராஜ் .