எங்கள் அன்பு ஐய்யாமை...
எங்கள் அன்பு ஐய்யாமை , எப்பொழுதும் மாத்திரை பெட்டியை எடுத்துக் காலை மாலை இரவு என பிரித்து ஒரு தண்ணீர் பாட்டிலை அருகே வைத்துக் கொண்டும் ஒரு துணியை எடுத்து தண்ணிர் பாட்டில் மாத்திரை பெட்டி கட்டில் என அதை கொண்டு துடைத்து சுத்தமாக வைத்தபடி இருக்கும் இடம் மட்டுமல்ல தன்னையும் முகமலர்ச்சியோடு இருப்பது அவர்களின் வழக்கம் . கூடவே ஒரு கைபேசி வேறு . இதுவே எங்கள் ஐய்யாமை . ஐய்யாமை அப்பாவின் அம்மா . எங்களுக்கு பாட்டி . அப்பாவின் அம்மாவை ஐய்யாமை என்றும் அப்பாவின் அப்பாவை ஐய்யப்பா என்றும் அழைப்பது வழக்கம் . எல்லோருக்கும் தாத்தா பாட்டி என்றாலே கொள்ள பிரியம் உண்டு . எங்களுக்கு தாத்தாவின் அன்பு மழையில் நனையும் பாக்கியம் கிட்டவில்லை . ஐய்யாமை அன்பு கிட்டியது அதுவும் தெவிட்டாத அன்பு . உங்களுக்கு பிடித்த பெண்மணி யார் என்று கேட்டால் எல்லோரும் சமுதாயத்தில் இருக்கும் சிறந்த நபரை கண்டிப்பாக கூறுவார்கள் . எங்களுக்கு ஐய்யாமை அப்படிப் பட்டவரே . மனதைரியம் படைத்த , ஆளுமை திறம் கொண்ட , ரசனைக்கு