எந்தன் உயிர் தோழியே...!
எனக்கொரு நண்பி இருந்தாள் எந்நாளும் துணையாய் இருந்தாள் எச்சி பண்டம் என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை எனலாம். மதங்கள் விழுங்கிய தோழமையே... மலர் போலவே பூஜித்தாள் தன்னலமில்லா ... துரோகமில்லா... நேர்மையானவள் தவறு செய்தால் சுட்டிக்காட்டவும் திறமையிருந்தால் தட்டிகொடுக்கவும் தவறாத தங்கநிலவுவள் எந்தன் மகிழ்வை விரும்புபவள் எந்தன் நலனை நாடுபவள் நாட்கள் எங்களை பிரித்தாளும் நினைவில் என்றும் நீங்காதவள்... --பிரவீணா தங்கராஜ் .