வாழுங்கள் வாழவிடுங்கள்
வாழுங்கள் வாழவிடுங்கள் நைனிகா டிராவல் பேக்கில் துணியை அடுக்கி கொண்டிருந்தாள். வைதேகி பேத்திக்கும் உணவு ஊட்டியபடி அவள் பின்னே வந்தவர் மருமகள் டிராவல் பேகில் துணியை அடுக்கவும் யோசனைவயப்பட்டு கணவரை நாடி சென்றார். "என்னங்க நீங்க அவ்ளோ சொல்லியும் இரண்டு நாள் லீவுக்கு செங்கல்பட்டு கிளம்பிட்டு இருக்காங்க." என்று நொடித்தார் வைதேகி. வேல்முருகனோ "அப்படியா?" என்பது போல விறுவிறுவென அறைக்கு வந்தார். அதற்குள் நைனிகா டிராவல் பையை மூடி வைத்து நிமிர மாமனார் வரவும் கையை பிசைந்தாள். "என்னம்மா இது. இந்த மாசம் வரவுக்கு மீறிய செலவுன்னு சொல்லி எங்கயும் போக வேண்டாம்னு சொன்னேன். ஆனா பையை தூக்கிட்டு கிளம்பினா என்ன அர்த்தம்" என்று எடுத்ததும் கத்தினார் வேல்முருகன். "மாமா எனக்கு என்ன தெரியும். அவர் தான் மூன்று மணிக்கு கிளம்பணும் எடுத்து வைனு சொன்னார். எனக்கு வேற எதுவும் தெரியாது. அவர் சொன்னப்படி டிரஸ் எடுத்து வச்சேன்" என்று கூறவும் வேல்முருகன் பையனிடம் பேசிக் கொள்வோமென ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார். 'எத்தனை முறை சொல்ல