Posts

நீ என் முதல் காதல் -30

  அத்தியாயம்-30    தங்கள் மகனும் மகளும் கூடவேயிருக்க ஆசைக்கொண்ட தாரிகாவிற்கு கரும்பு திண்ண கூலியா வாடி ராசாத்தி என்று கூப்பிட, பைரவும் மகன் வந்ததும் திருமணம் முடித்து இங்கே வந்ததால் கூடவே இருந்து திருமண ஜோடியை கண்குளிர பார்க்க ஆசைக் கொண்டார்கள்.   அதன் காரணமாக மதிய விருந்து முடித்து ஸ்ரீநிதி ம்ருத்யுவை கையோடு அழைத்து சென்றனர். ரிதன்யா காலையில் அப்படியே பள்ளிக்கூடம் சென்றதால் ஸ்ரீவினிதா லலிதாவும் பேரன் பேத்தியோடு சென்றனர்.       ஸ்ரீநிதியை தனியாக அறையில் நிற்க வைத்து, "இங்க பாரு நான் யாருனு எங்கப்பா அம்மாவிடம் சொல்லணும்னு தானே ஊருக்கு முன்ன கிளம்பற. ப்ளீஸ் அதுமாதிரி எதுவும் பண்ணிடாத. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். தயவு செய்து விவாகரத்து தந்துடறேன். நீ ஜீவி கூட வாழ்ந்துக்கோ" என்று ம்ருத்யுஜெயன் கூறவும் ஸ்ரீநிதியோ "கையை விடுடா" என்று கோபமாக மொழிந்துவிட்டு கடந்தாள்.       ம்ருத்யுவிற்கு ஸ்ரீநிதி தன் பெற்றோரிடம் உரைத்திடுவாளென பயம் வந்தது சில நொடியே. அதன் பின் "எப்படியும் நீ உண்மையை சொன்னா ஷண்மதி அத்தை உன்னை உண்டில்லைனு ஆக்கிடுவாங்க. அதை மீறி சொன்னா யுகி மாமாவோட

நீ என் முதல் காதல்-29

  அத்தியாயம்-29 மணி எட்டு இருக்கும் விடாமல் காலிங் பெல் அடிக்க கேட்டு ஸ்ரீநிதி கண்விழித்தாள். "எந்த எருமை இப்படி உயிரை வாங்குது" என்று போர்வையை வீசிவிட்டு நடக்க, ம்ருத்யுவை தேடி அறைக்கு சென்றாள். தாரிகா-பைரவ் புகைப்படத்தை கட்டியணைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இந்த அழைப்பு மணியோசையிலும் விழித்திறக்காதவனை கண்டு, 'நேத்து எப்ப தூங்கினானோ, எப்படி சத்தம் கேட்டும் எழுந்திருக்கலை' என்று வாசலுக்கு சென்றாள். கதவின் சிறு துவாரம் வழியாக எட்டி பார்த்தாள். வால் இல்லாத தன் தங்கை ரிது குரங்கு வந்திருப்பது தெரிந்தது. 'இவளை... எனக்கு சக்களத்தியா வர எவ்ளோ ஆசை. மண்டையை உடைக்க போறேன்' என்று கதவை திறக்க முயல, "சும்மாயிரு ரிதும்மா. அடிக்கடி பெல் அடிக்காத. அக்காவா எழுந்து வருவா.' என்று ஸ்ரீவினிதா பாட்டி குரல் கேட்டது. ''பெல் அடிச்சே வரலை. இதுல அடிச்சிட்டு வெயிட் பண்ணினா எப்படி வருவாங்க?" என்று சிறுகுழந்தையாக பதில் கொடுத்தாள். "புதுசா கல்யாணமானவங்க கொஞ்சம் லேட்டா தான்டி வருவாங்க. இந்த பதில் திருப்தியா இருக்கா. கொஞ்சம் கையை காலை வச்சிட்டு சும்மாயிரு"

நீ என் முதல் காதல் -28

 அத்தியாயம்-28    வீட்டிற்குள் நுழையும் போது யுகேந்திரன் வேகமாய் வந்து அணைத்து கொண்டார்.     ஷண்மதியோ கையை கட்டிக்கொண்டு கூர்பார்வையை வீசிட, ம்ருத்யு கண்கள் ஸ்ரீநிதியை தேடியது.     "ரூம் உள்ளயிருக்கா இன்னும் அவளுக்கு டயர்ட் இருக்கு." என்று ஷண்மதி உரைக்கவும் ம்ருத்யுவிற்கு அப்பாடா என்றிருந்தது.     ம்ருத்யுவாக வாய் திறப்பது தற்போது அதிசயமென புரிந்து, "ஒரு விஷயம் ரகசியமா இருக்கற வரை தான் அதுக்கு மதிப்பு. எங்களுக்கு தெரிந்தது யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைச்சது. என் முட்டாள்தனம் என் மகள் ஸ்கூல்ல லேப் எரியுதுனு சொன்னதும் ஓடிவந்தேன். அன்னைக்கு இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி லேப் போகணும் எனக்கு ம்ருத்யு ஆன்சர் சொல்வான்னு ஸ்ரீநிதி பேசிட்டு இருந்தா. அதோட பாவனா இரண்டு பேரும் இன்னும் வெளிவரலை ஆன்ட்டினு மூச்சு வாங்க நெஞ்சுல கை வச்சி இரும்பிட்டு வந்தா. நெஞ்சுல கை வைக்கவும் சட்டுனு எனக்கு உன் நினைவு தான். சின்ன வயசுல பிறந்தப்பவே இதயப் பிரச்சனை இருந்ததால உனக்கு ஏதாவது ஆகிடுமானு தான் பயந்தேன்.     என் பொண்ணு எப்படியும் சாமர்த்தியமா நடந்துப்பானு நம்பினேன்." என்றதும் ஸ்ரீநிதி அறைக்கு

நீ என் முதல் காதல் -27

 அத்தியாயம்-27     ஸ்ரீநிதியை மருத்துவமனையில் சேர்த்தப்பின் ஐசியூ வார்டிற்கு வெளியே தலை தொங்கி கண்ணீரோடு வீற்றியிருந்தான்.    யுகேந்திரனோ தன் செல்ல மருமகனின் இதயத்தை தானே கத்திக்கொண்டு கீறிய மடத்தனத்தை அறிந்து ம்ருத்யு அருகே செல்லவும் தயங்கினார்.    ம்ருத்யு மனம் தான் மகளிடம் பேசியதில் வலியோடு போராடுவதை உணர்ந்து மெதுவாக ம்ருத்யு அருகே அமர்ந்தார்.    "ம்ருத்யு.. டேய் கண்ணா என்னை பாருடா" என்று கன்னத்தை பிடித்து திருப்ப, ம்ருத்யு வெறித்த பார்வையோடு மாமனை கண்டான்.    "எப்படி மாமா என் மேல அன்பாயிருந்த. உனக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்குமே. அனாதையா கிடைச்ச என்னை, நோஞ்சானா இருந்த என்னிடம் எப்படி மாமா பாசம் வைச்ச? பாசம் வச்சது போதாதுனு ஸ்ரீநிதியை கட்டிக்கொடுத்திருக்கிங்க" என்று குலுங்கி குலுங்கி அழுதான்.     "ம்ருத்யு உன் வாயால அப்படி சொல்லாதடா. நீ அனாதை இல்லை. என் அக்கா தாரிகா தான் உன் அம்மா. என் மாமா பைரவ் தான் உன் அப்பா." என்று கூற ம்ருத்யுவோ இல்லையென்பதாக தலையாட்டி மறுத்தான்.     யுகேந்திரன் தலையிலடித்து அய்யோ உனக்கும் என் அக்கா மாமாவுக்கும் ஷண்மதியால எதுவும்

நீ என் முதல் காதல்-26

 அத்தியாயம்-26   யுகேந்திரனுக்கு நா வரை வந்த ரகசியம் மகளிடம் போட்டு உடைக்க முடியவில்லை.       சாதாரணமான விஷயமா? ஸ்ரீநிதி கோபத்தில் ம்ருத்யுவை பிற்காலத்தில் எடுத்தெறிந்து பேசிவிட்டால்? அந்தளவு கூட சிந்திக்காதவன் அல்ல. அதோடு ம்ருத்யுவிற்கு இவ்விஷயம் தெரிந்து தாரிகா அக்கா பைரவ் மாமாவிற்கும் உண்மை தெரிந்தால்? இத்தனை நாட்களாய் கட்டிக்காத்தது வீணாக போய்விடுமே.    அதனால் நாவை அடக்கி, "குட்டிம்மா அம்மா மட்டுமா ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கா? நானும் தான் ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கேன். அவன் என் அக்கா பையன் டா.  இதை தவிர வேற காரணம் என்ன இருந்திடப்போகுது. காதல் தோல்வியை தலைமுழுகிட்டு ம்ருத்யுவோட வாழ்ந்து பாருடா. அப்பாவுமே காதல் தோல்வி அடைந்தவன். ஷண்மதி அம்மாவை நேசிக்கலையா?" என்று தலை கோதினார்.      யுகேந்திரன் ஒரு இக்கட்டில் தன் காதலியை கைப்பிடிக்க வந்தவன் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஷண்மதியை மணக்கும் இக்கட்டிற்கு சென்றான். காதல் தோல்வியை கடந்து ஷண்மதியை விரும்பினான்.     ஷண்மதியும் பள்ளிக்காலம் முதல் நேசம் வைத்ததால் யுகேந்திரனிடம் தன் காதலை ம்ருத்யு போல தான் போராடி பெற்றாள்.    அதை வைத்

நீ என் முதல் காதல் -25

அத்தியாயம்-25     ஸ்ரீநிதி பேச வேண்டும் என்றதும் யுகேந்திரன் மகளிடம், "என்ன பேசணும் என் மகளுக்கு? ஸ்ரீகுட்டி ரிதுவை ஏன்டா அடிச்ச? உனக்கும் ம்ருத்யுவிற்கும் ஏதோ சண்டைனு ரிதன்யா சொன்னா? அந்த கோபத்துல தான் அவன் மேல ஹாண்ட்பேக்கை தூக்கிப்போட்டியா?     சண்டை சின்னதா? பெரிசா? ஓ எங்களிடம் ஷேர் பண்ணணுமா? இல்லைனா நீங்களா சண்டையை முடிச்சிப்பிங்களா?" என்று கேட்கும்வரை ஸ்ரீநிதி தந்தை தோளில் கிளியாக சாய்ந்தாள். இதுவரை தந்தையிடம் கூற தயங்கி மூச்சு விடாமல் இருந்தாள். என்ன தான் கோபமிருந்தாலும் இருவர் சண்டையில் பெரியவர்களிடம் சென்றால் ஜீவி பற்றி விளக்க வேண்டும். அதற்கு வேறு பதில் கூறியாக வேண்டுமே என மலைத்தாள். அதை தவிர்த்து தாய் ஏன் ம்ருத்யுவிடம் பாசம் காட்டுகின்றாளென்று கேட்க முடியாதா என்று வாடினாள்.     ஷண்மதியோ "கேட்கறார்ல சொல்லு" என்று அதட்டல் வரவும், அன்னைக்கு தான் ஜீவியை தெரியுமே. இன்னமும் மறைத்து ஒன்றுக்கும் ஆகப்போவதில்லையே என்று அனைத்தும் கூறிட வாய் திறந்தாள்.     "அப்பா நான் சொல்லறதை முதல்ல பொறுமையா கேளுங்க. அப்பறம் என்னை திட்டினாலும் ஓகே. பட் எனக்கு கடைசியா தெரிந்துக்க

நீ என் முதல் காதல் -24

அத்தியாயம்-24     ஸ்ரீநிதி அதீதமாய் கோபத்தோடு வீற்றிருந்தாள். அவளுக்கு ஜீவி வாட்சப்பில் அனுப்பியா இன்விடேஷன் கார்ட் அப்படி.     ஜீவி வந்ததும் "ஹாய் நிதி" என்று வந்தவனிடம், "நீயும் ஏன்டா இப்படியிருக்க? அவன் தான் ஏமாத்தி மேரேஜ் பண்ணி என்னை இம்சை தர்றான் என்றால், நீ எங்கேஜ்மெண்ட் இன்விடேஷன் அனுப்பற?" என்று சண்டையை பிடித்தாள்.     "நான் என்ன செய்தா சரியா இருக்கும் ஸ்ரீநிதி.     உன்னை உண்மையா விரும்பினேன். கொஞ்சம் கம்பெனி வரட்டும் பேசலாம்னு பொறுமை காத்தேன். 'பொறுத்தார் பூமி ஆள்வார்'னு பழமொழி இருக்கு. ஆனா என் பொறுமை என் வாழ்க்கையை மாற்றிடுச்சு.         என் தேவதையை மிஸ் பண்ணிட்டேன். தந்திரமா உள்ள புகுந்த ம்ருத்யு தட்டிப் பறிச்சிட்டான்.       நீ சொல்லற மாதிரி விவாகரத்து வாங்கிட்டு உன்னை மணக்க நான் ரெடி. ஆனா நான் ஹீரோ கிடையாது ஸ்ரீநிதி.     நான் ஒரு காமன் மேன். ஏற்கனவே இதை நான் சொல்லிருக்கணும். நீ ம்ருத்யுவை பத்தி பேசறப்ப எல்லாம் அடிவயிறு எரியும். இதுல என் எதிர்ல வீடியோ கால்ல அவனோட பேசிட்டே சிரிச்சிட்டு இருக்கறப்ப உன் போனை தட்டிவிடணும்னு தோணும். ஆனா சந்தேகப்படறே