Posts

என் இறுதி மூச்சில் - காதல் பிதற்றல் 31

நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டை அதில் முகம் திருப்பி நான் சொல்லப்படும் போடா என்ற முணுமுணுப்பும் மாலை நீ வந்த அடுத்த நொடி மறந்தே போயிருக்கும் இரு கண்களின் தோன்றிய காதலில் ....           *** கரம் பற்றிய போது நான் உச்சரித்த உன் பெயரில் இருந்த காதலை விட ... என் இறுதி மூச்சில் உன் பெயரை சுவாசித்தபடி கரைவேன் அதில் உள்ளது நம் காதல் .             -- பிரவீணா தங்கராஜ் .

தூசு-காதல் பிதற்றல்-30

அவன் பாதம் பட்ட மண் சிறகு முளைத்து மேல் எழும்ப அதை கண்ணில் பொத்தி இமை மூடி பாதுகாத்தேன் . நீங்கள் அதை சாதாரணமாக தூசு கண்ணில் பட்டது என்கின்றீர் .😉                  -- பிரவீணா தங்கராஜ்

சிற்பம்

இவன் வெறும் கல்லென்றே யாவரும் உளி போல தாக்க பிறர் அறியார் கல்லானது என்றாவது  உளியின் வலியை தாங்கிய சிற்பம் ஆகுமென்று ...                     -- பிரவீணா தங்கராஜ் .

முன்னிருக்கையில் மகள்

மித வேக தடையோ  சாலை விதிகளோ எமக்கு உணர்த்த தேவையில்லை வாகனத்தின் முன்னிருக்கையில் மகள்  அமர்கையில் .                        -- பிரவீணா தங்கராஜ் .

உயிரே பறித்து இருக்கலாம்- காதல் பிதற்றல் -29

உன் விழி அம்பு  என் இதயத்தை தாக்க பறிப் போனது எந்தன் உயிர் அல்ல ... எந்தன் உள்ளம் . மெல்ல புரிந்தது உயிரே பறித்து இருக்கலாமென்று  உள்ளம் இப்பொழுது உன்னிடமே வந்து அடைக்கலம் தேடுகின்றதே...!                    -- பிரவீணா தங்கராஜ் .

முதியோர் ஹைக்கூ ...

Image
முதியோர் ஹைக்கூ – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

ஒன்று சேர்த்தன

அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கே யென்று வாதாடிய யந்த தாவர நிலத்தினை பஞ்சாயத்து கூட்டி சரிவர பிரித்தே கொடுத்திட , என்றோ ஒரு நாள் அவ்விருவரும்  உண்டு தூக்கியெறிந்த தர்பூசணி செடி வேலிதாண்டியே இருவர் நிலத்தையும் ஒன்று சேர்த்தன .                           -- பிரவீணா தங்கராஜ் .

துள்ளித் திரிந்த பருவம்

முட்டி வரை பாவாடை யணிந்து முக மெல்லாம் புன்னகை யணிந்து கொட்டும் மழையிலும் கேளிப் பேச்சிலும் கொட்ட மடித்தே வாழ்க்கை நகர முட்டுக் கட்டையாய் முடிவு தந்தது பருவமெனும் சோ(சே)லையில் புகுந்தப் பின் துள்ளித் திரிந்த பருவமே - நீ எங்குச் சென்று ஒளிந்துக் கொண்டாய் ...!                       -- பிரவீணா தங்கராஜ் .

கருணை இல்லம்

Image
அத்திரு மரத்தைச் சுற்றி வேண்டுபவரே அத்திரிசாரமின்றி சுவீகாரம் புரிந்திடுவீர் புணர்ச்சியால் பூத்த பூக்கள் தான் வேறு பாவம் அறியா சிசுக்கள் தான் குப்பையில் பிறந்த மாணிக்கங்களே கூடுகளில் பறக்கவே ஆசைக்கொள்கின்றன உண்ண உணவும் இருக்க இடமும் தேடுவதை விட தாய் தந்தையென்ற பந்தங்கள் அரவணைக்கவே அண்டுகின்றன . கருணை யில்லா இல்லத்தில் சேர்த்துக்க செய்யாது கருணையில்லத்தில் சேர்ப்பித்த கயவர்களையும்  அறியாத பால்  முகமும் , முல்லை சிரிப்பும் உதிர்த்து பாசத்திற்கு  மட்டுமே ஏங்கிடும் உள்ளமது கண்ணில் ஏக்கம் கொண்டு தேடுகின்றனர் காக்க எவரேனும் வருவார்களென்று ... நேசத்தை கண்ணில் வைத்தே நெஞ்சில் வலியை மறைத்தே  இல்லத்தை நோக்கி வரும் மனத்தினையே  நெஞ்சத்தில் பந்தமென எண்ணி கொண்டாடும் மழலை கூட்டம் .                                   -- பிரவீணா தங்கராஜ் .

இதயத்தைத் திருடாதே

Image
எங்கோ வசித்து  என்னை இம்சித்துஎன் இதய சிம்மாசனத்தை தட்டுகின்றாய்...! கண்களில் தேடவைத்து கனவிலே மிதக்கவிட்டு தனிமையை ரசிக்கவைத்து மவுனத்தை வாசிக்கவைத்து இதயத்தை திருடி விட்டாய்......💖                 -- பிரவீணா தங்கராஜ் .