Posts

ஸ்டாபெர்ரி பெண்ணே- 6

 🍓6               அதிகாலையில் ஜாக்கிங் உடையில் வெற்றி பீச் ரோட்டில் ஓடி முடித்து களைத்து வர ஆராதனா கோவமாக இருந்தாள்.       ''ஹாய் ஜெஸில் என்ன கோவமா இருக்கற மாதிரி இருக்கு?'' என்றே ஷூ கழட்ட       ''செல்வா செய்யறதை செய்துவிட்டு பேசாதீங்க... பாவம் நான் வீட்டிலே இருந்து கஷ்டமா இருக்கு உங்க கூட ஜாக்கிங் வரலாம் என்றே இருந்தேன். நீங்க விட்டுட்டு போயிட்டீங்க... எனக்கு தனியா வீட்டில் போர் அடிக்கு தெரியுமா?'' என்றே கோவத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்தாள்.      ''சாரி ஜெஸில் நாளைக்கு உன்னையும் கூட்டிட்டு போறேன்'' என்றே சொல்லி மழுப்பினான்.      ''நான் எப்படி பேசுவேன்? உங்க கிட்ட கோவமா வா? இல்லை நார்மலாவா? அப்படி இல்லனா வாயடியா? சொல்லுங்க செல்வா?'' நொடிக்கு நொடி முக மற்றம் கொண்டு கேட்டாள்.       ''நீ அருவி மாதிரி சலசலன்னு பேசுவ.. கேட்க கேட்க கேட்டுட்டே இருக்கலாம் என்று தோணும்....'' ரசனையோடு சொன்னான்.       ''அப்போ நீங்க எப்படி?'' என்றாள் புருவம் உயர்த்தி.       ''கேட்டு இருப்பியே

ஸ்டாபெர்ரி பெண்ணே -5

 🍓5              அடுத்த நாள் காலை மணி பதினொன்று காட்டும் வரை வெற்றி எழுந்து வரவே இல்லை. ஆராதனா மட்டும் எழுந்து குளித்து தோட்டத்தில் நகர் வலம் புரிந்து சாப்பிட்டு என்றே இருக்க அவனின் கதவு திறக்கவே இல்லை. பணியாட்கள் கூட அவனை எழுப்ப சென்றதாகவும் இல்லை. மணி 11:30 ஆனதும் லேண்ட் லைன் போன் அலறியது. எல்லோரும் பார்த்து மீண்டும் தனது பணிகளை தொடர ஆராதனாவுக்கு தான் ஒரு ஆர்வக்கோளாறில் போனை எடுத்தாள்.       ''பாஸ்.. ஹலோ பாஸ்'' என்றே ஒரு ஆணின் குரல் கேட்க திருதிருவென முழித்தவள்         ''சாரி இங்க கொள்ளை கூட்ட தலைவன் பாஸ் யாரும் இல்லை இது வெற்றி செல்வன் வீடு உங்களுக்கு யார் வேணும்'' என்றே ஆராதனா சொல்ல       ''மேடம்.... நீங்களா?''       ''சாரி மேடம்.. பாஸ் நம்பர் போன் செய்தேன் எடுக்கலை... ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று பாஸ் நாலு நாள் ஆபிஸ் வரலை... அதனால இன்னிக்கு கூப்பிடலாம் என்றே போன் செய்தேன்'' என்றே சொல்ல மேலே மாடியை பார்த்து முடித்தாள்.        ''அவர் இன்னும் ரூமை விட்டு வெளியே வரலை... தூங்கறாரோ என்னவோ

ஸ்டாபெர்ரி பெண்ணே-4

 🍓4            இசிஆர் ரோட்டில் ஒரு வீட்டில் வாகனம் செல்ல அவனின் வருகை உணர்ந்து கேட் கதவு திறந்தே வெளிபட்டது.           ஆராதனாவுக்கு கண்கள் தெரித்துவிடுவது போல இருந்தன. இந்த இடம் இதுக்கு முன்ன பார்த்த நினைவு இல்லையே... இவரையும்... என்றே வெற்றியை பார்க்க அவனோ ''இறங்கு'' என்றான்.           சே எனக்கு தான் நினைவு போய்டுச்சு என்று சொல்லி இருக்காங்க அப்போ எப்படி இந்த வீடு இவர் எல்லாம் நினைவு இருக்கும் ஆனா இவர் என் பேர் வச்சியே கூப்பிடலை என்றே எண்ணியவளுக்கு       ''என் பேர் என்ன....? அப்பறம் உங்க பேர் என்ன? நான் உங்களுக்கு என்ன உறவு டாக்டர் கார்டியன் என்று சொல்லி இருக்காங்க... ?'' என்றே கேள்வி மேல் கேள்வி கேட்பவளை எண்ணி வாயில் விரல் வைத்து கண்களை முன் பக்கம் காட்டினான்.         அங்கே ஒரு நடுத்தர பெண்மணி ஆரத்தி சுற்றி கொண்டு இருந்தாள். முகமெங்கும் புன்னகையோடு சுற்றி குங்குமம் இட்டாள். வெற்றியோ மனதில் அவளிடம் சொல்லாமலே அவள் கால் வலது எடுத்து நுழைய வேண்டும் என்றே எண்ணி வேண்ட அவளும் அதற்கு ஏற்றார் போல வலது பாதத்தினை வைத்தே நடந்தாள். உள்ளுக்குள் மகிழ்

ஸ்டாபெர்ரி பெண்ணே-3

 🍓 3              உதய் ஆராதனா அழகை கண்டு விரும்பியவனா? அவளுக்கு இப்படி ஆனதும் சராசரி ஆண்மகனாக யோசிக்கின்றானா? என்றே யோசிக்க உதயிடம் பேச அருகே செல்ல அவனோ ஆராதனா இடம் நோக்கி சென்றான். அவனை தொடர்ந்து ஆனால் இடைவெளி விட்டே நின்று இருக்க உதய் ஆராதனாவிடம் பேச ஆரம்பித்தான்.       ''சாரி ஆராதனா என் முன்னால உன்னை தூக்கிட்டு போய் இருக்காங்க ஆனா நான் உன்னை அந்த பொறுக்கிங்களை ஒன்னும் பண்ண முடியலை... அவனுங்களை சகா அடிக்கணும் என்று இருக்கு ஆனா என்னால முடியாது. என்னால தான் உன் பெண்மை போயிடுச்சு... நான் உன்னை காப்பாற்றி இருக்கனும்... எல்லாம் என்னாலே தான்.. ''என்றே தலையில் அடித்துக் கொண்டான்.       ''சாரி ஆராதனா என்னால எல்லாம் மறந்து உன்னோட வாழனும் என்றாலும் நீ தாய்மை அடைய மாட்டேன்னு சொல்லிட்டாங்க என் அம்மாவுக்கு எல்லாம் எனக்கு வாரிசு வேண்டும் என்று இருப்பாங்க. உன்னால அப்படி தர முடியாத பட்சத்தில் அவங்க உன்னை எப்படியும் வெறுப்பாங்க. அதுக்கு பிறகு வேறொரு பெண்ணை தான் கல்யாணம் செய்ய சொல்லி என்னை வற்புறுத்துவங்க...  உனக்கு தாலி கட்டி எல்லாம் தெரிந்தும் அந்த கஷ்டம் வே

ஸ்டாபெர்ரி பெண்ணே -2

 🍓 2             வெற்றி மனம் 'ஆராதனா... ஆராதனா...'  என்றே துடிக்க  பொறுத்துக் கொண்டு எழ முயன்றான். இம்முறை வேறு ஒருவன் வந்து கன்னத்தில் அறைந்திட மயக்கம் மருந்தின் வினையால் கீழே விழுந்தான் வெற்றி. முழுதும் சுவாசிக்கவில்லை என்றாலும் அதன் தன்மை காட்டும் தானே. இம்முறை ஏற்கனவே அறைந்தவன் இம்முறை ஆராதனாவை நெருங்கி இருந்தான். உயிர் போகும் அளவிற்கு துடித்து கொண்டு இருந்தது வெற்றி மட்டுமே ஆராதனா சுய நினைவு இன்றி மயக்கத்தின் பிடியில் பிணம் போல கிடந்தாள்.             கதவு திறந்து உதய் வரும் நேரம்       ''டேய் இவன் இங்க இருக்கான் அப்போ இது யாரு? இவனை தானே காயப்படுத்த சொன்னாங்க... போச்சு ஏற்கனவே சும்மா மிரட்ட சொன்னான் இவளை பார்த்தும் சும்மா விட முடியுமா என்று தப்பு பண்ணிட்டோம் இவனின் காதலியை தானே பயமுறுத்த சொன்னான்'' என்றே ஒருவனின் கேள்வி மற்றவன் பதில் கூறும் முன்னே உதய் அவர்களில் ஒருவனை அடிக்க செய்ய அவன் விழுந்த வேகம் தண்ணிர் ஜக் உடைந்து கீழே இருக்கும் வெற்றி மேலே தெளிக்க வெற்றி எழுந்தான். தனது முன்னே ஆராதனா இருக்க அவளை கைகளில் ஏந்தினான். உதய் இருவரையும் உள்ளே

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

Image
   🍓👩1                                                                                                        மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் தூண்டும் நேரம் , இருந்தும் ஆராதனா அவளின் கைகளை கூட பற்ற விடாமல் தூரத்திலே இருந்து பேசிக்கொண்டே இருந்தாள்.             உதய்க்கு தான் மற்ற நேரமாக இருந்தால் பேசாதே என்றே தடுப்பான். ஆனால் ஆராதனா பேசும் விஷயம் தங்கள் கல்யாண கனவுகள் பற்றி என்பதால் மட்டுமே கேட்டு கொண்டு இருந்தான்.        ''உதய் கல்யாணம் சிம்பிளா நெருங்கிய சொந்தம் வரை கூட செய்யலாம் ஆனா இவள் என்னுடையவன் என்னுடையவள் என்று அருகே அருகே நின்று ஒரு பெரிய வரவேற்பு கொடுக்கணும். வந்து இருக்கற உறவு கெஸ்ட் என்று யாராவது சில பேர் நம்மளை பார்த்து பெஸ்ட் பேர்... சூப்பர் ஜோடி... என்று சொல்லி போறதை கேட்டு வரும் பாரு ஒரு பீல் அது வேண்டும்...''      ''சரிங்க மேடம் அப்பறம் கல்யாணம் பற்றி பேசிட்டிங்க குழந்தை எத்தனை பெற்றுக்க போறிங்க அதையும் சொல்லிடுங்க அப்போ தானே.. ''       ''ஹ்ம்ம் உன்னை... என்றே துரத்த மணலில் அவளின் ஓட்டத்தில் அவன் வேண்டுமென்றே பிடிபடு

முட்டாள்

Image
மழைநிலா மின்னிதழில் 'முட்டாள்' என்ற தலைப்பில் பிரசுரமானவை. 

அன்பைத்தேடி

*அன்பைத் தேடி* நிலையற்ற பிரபஞ்சத்தில் நிலையான அன்பைத்தேடி முரண்பாட்டான கவிதையென்று முதலடி நாடி சிறகுவிரிக்கின்றது இதயச்சிறையில் வீற்றிருக்க இருவிழி நயனத்தில் அன்பென்ற மௌனமொழி அடைப்பெடுத்து ஆர்பறிக்க, தன்னருகே தோள்தட்டி தஞ்சமென மனயெட்டில் தாங்கிடவே தேடிகின்றேன் அன்பெனும் தேடுதலில்...     -பிரவீணா தங்கராஜ் 

தாரகையின் வேதனை

Image
செவ்வான வீதியிலே செங்கதிரோனின் ஆட்சியிலே பூமியதன் அணலை குளிர்விக்கும் தண்மதியோடு புலம்பெயர்ந்தேன் நானும் காலங்கள் மாறியதனால்  காட்சியும் மாறியது. சிறார் கூட என்னை ஓவியத்தில் தீட்டவில்லை. தாரகையான என்னை மறந்தீரோ. ஆங்கில பாடலில் அணிவகுப்பில் மட்டும் தானோ? காரியிருளில் எனை காணாது தேடியவரும் யாருமுண்டோ பேரண்டத்தில் வெறுமையை களையவே பெதும்பையிவள் போராடுகிறாள். வான்தேவதை கூடையேந்தி வர்ணம் கூட்ட விண்மீனை பொருத்துகிறாள் ஆலி வரும் பொழுது மட்டும் ஒளிந்து நில்லென்ற கட்டளையோடு. -பிரவீணா தங்கராஜ்.

Magic Water

Image
 Magic Water   ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, "அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை." என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா.      "ப்ரியா" என்ற அழைப்பு தொடுத்தான் விஜய். இரண்டாம் தளத்தில் இருந்து என்னயென்று கேட்க, "என் போன்" என்றதும் அதை கொடுக்க சென்றாள்.     அந்த நேரம் ரகி விழி திறந்தாள். குளிருட்டப்பெற்ற அறையில் அவள் மட்டும் இருக்க, தனது ஷாக்ஸ் அணிந்த காலில் மெல்ல நடந்து வந்தாள்.      அந்த இடத்தில் யாருமே இல்லை என்பதை அறிந்து தன்னை பூட்டி வைத்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.      ஜன்னல் வழியே பகலவன்  கதிர்கள் ஒளியை தர இதுவரை ஒளியை காணாத அவள் கண்கள் கூசியது.    ஒவ்வொர் அடியாக எடுத்து வைத்தாள் அவளின் நடை எந்திரம் போல மெதுவாக இருந்தது.      கண்கள் நாலப்பக்கமும் தூழாவியது. இங்கே தன்னை தவிர யாருமில்லையென்ற எண்ணம் எழுவும், குளிர்சாதன பெட்டியில் கை சென்றது. அங்கே அந்த நீரும் இருந்தது.     கண்ணாடியில் குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்து முடித்தாள்.        இது ச