Posts

காதல் பிதற்றல் - 7 யாரடா நீ

எங்கோ வசித்து என்னை இம்சித்து என் இதய சிம்மாசனத்தை தட்டுகின்றாய் ... யாரடா நீ ...       பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 6 இனிய விபத்து

உனக்கும்-எனக்கும் எப்பொழுது விபத்து ? புரியவில்லையா ?! நாம் எப்பொழுது சந்திக்கப் போகின்றோம் .   --பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 5 என்ன வள்ளல் நீ

ஆசையாக தான் வாங்கி தருவாய் , புடவையை ...! ஆனால் , திரும்ப கேட்கின்றாயே ! இரவில் மட்டும் .             - பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -4 உன்னை தேடுவதால் ...

யாருமில்லா இடத்தில் கூட நாணத்தால் முகம் தாழ்பாளிடுகிறது கைகளால் ஏனோ ...! நீ இருப்பதாக எண்ணுவதால் ...        -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -3 தென்றலடா நீ எனக்கு

என்னை அணைப்பது நீயென நினைப்பேன் . ஆனால் தென்றலென வருடும் காற்று . மீண்டும் ஓர் அணைப்புக்குள் ஆகும் என் மெய்கள் . தென்றலென நினைப்பேன் . ஆனால் ... நீ உண்மை அறிவேன் என்னவனே தென்றலென ...                    -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -2 எதிர்பாரா முத்தம் என்றோ !?

அந்திமாலை பொழுதில்   சூரியன் ஒளிந்து பார்க்க , அலைகடல் கரையிலே   வந்து எட்டிப் பார்க்க , அழகிய தென்றல்   என்னவன் மீது உரச , அயலவர் காண என்கண்கள்   உன்னை வட்டமிட , அதை கண்டும் காணாது   என் இதழ் பேசியிருக்க , என் இமை மூடிதிறக்க   இதழ்கள் இரண்டும் ஒன்றாகுமா ?              -- பிரவீணா தங்கராஜ் .

எனக்குள் நீ - பிதற்றல் 1

சீக்கிரம் என்னில் சேர்ந்திடு   இல்லையேல் தண்டனைக் கூடும்  இருபது வருடத்திற்குப் பிரிந்த  தண்டனை என்ன தெரியுமா  என் விழியில் கைதுச்  செய்து  என் இதச் சிறையில் அடைத்து  என்னை உனக்கு உயில் எழுத  என் உயிரில் உன் ஆயுள் முழுதும் தொலைக்க வேண்டுமடா....!                   -- பிரவீணா தங்கராஜ் .

சமூக அவலம்- அனிதா மரணம்

 ஓடி ஒளியாதே பாப்பா - நீ   ஓய்ந்துயிருக்கலாகாது -பாப்பா . கூடி போராடு பாப்பா - ஒரு   தடையினை உடைத்திடு பாப்பா . சின்ன சிறு பிரச்சனை என்று ... - நீ   விட்டு செல்லாதே பாப்பா வலிகள் நிறைந்ததடி பாப்பா   அனிதா மரணம் - அதை வலிந்து குரல் கொடு பாப்பா . கொள்ளை அடிப்பது அரசியல் -அதை   கோடிட்டு காட்டிடு பாப்பா . எட்டு திக்கும் உள்ள நீட்டு - அதற்கு   பூட்டு போடா வேண்டுமடி பாப்பா . படிப்பு எல்லோருக்கும் ஒன்றே - அதை    பாதகம் செய்யும் ஆட்சி - அது மனிதருக்கு தோழன் இல்லையடி பாப்பா .                  -- பிரவீணா தங்கராஜ் .

கவிக்கோ _ பிறந்த நாள் _ பரிசு போட்டி -----படைப்பு குழுமம் தலைப்பு -பாதங்களால் நிறையும் வீடு

கோமாதா பாதம் பட்டு தான் ,குடி புகுந்தோம் குடும்பமாக . குடி வந்த பிறகு தான் , கண்ணன் பாதம் பார்த்தோம் . ஒன்று , இரண்டு ,மூன்றென , மூன்று சிசு ஈன்றேடுத்தோம் . மூவருக்குமே .... பெயர்சூட்டு விழா , காது குத்தல் , பிறந்த நாள் விழா...என்று நன்னாள் பார்த்து , உறவுகளின் பாதங்களால் வீட்டை நிறைத்தோம் . அதிலும் , மகள் எனும் சேய் பூப்பெய்தபோது ,  உறவு மட்டும் இன்றி ஊரையே வீட்டிற்குள் அழைத்தோம் . பாதங்கள் கணக்கிடாது பந்தியிட்டோம். அடுத்த எட்டு ஆண்டுகளில் அடுத்தடுத்தாய் ... வரிசையாய் ...விமர்சனமாய் ... மணம் முடித்து வைத்தோம் . அன்று .... வந்த பாதங்களின் இரைச்சலில் கிண்டல் ,கேலி செய்து மகிழ்ந்து குலாவினோம் . குட்டி குட்டி குடும்பமானது ... ஆஸ்திரேலியா... அமெரிக்கா ... க்ரீன் கார்டு வாழ்க்கை அங்கே . பதித்து வைத்த தரப்பலகை தேய்மானம் ஆக - இங்கு பாதங்கள் மட்டும் இல்லை . கோகுல கண்ணன் பாதம் பதிக்க , பேரன்-பேத்தி பாதம் தேடி கடல் தாண்டாவா முடியும் ? அல்லது ஸ்கைப் மூலமாக வா பாதம் பதிக்க இயலும் . அவர்கள் வரும் நாளே எங்களுக்கு கோகுல அஷ்டமி . என்ன செய்ய ? ஏது செய்ய ? நேரங

ஒரு குழந்தையின் வலி

காதல் பெரிதென பெற்றோரை துறந்தாய் .... போற்றிருப்பேன் . கட்டிய கணவனை துறந்தாய் ... விடு கழுதையென , தலை முழிகி இருப்பேன் . முத்து போன்ற பிள்ளையை துறந்த்தையே ...ஒப்பவில்லை . அதனாலே , என் மனம்... உன்னை தாயன்று ஒப்பவில்லை . மாற்றாந்தாய் ... மறுதாயக , தந்தை மணம்மாற்றி அழைத்துவர , மறுகினேன் . அரவணைக்க மறுத்ததால் ... தாயென ஏற்க மறுத்துவிட்டது . நித்திரையில் மடி சாய்ந்து , தாய் விரல் என் கேசம் கோதிடை, தாய் தேடினேன் . பருவம் வந்தது . கொட்டும் மழையும் , குழந்தை சிரிப்பும் , அலை தொடும் தென்றலும்  , வரிகளை வடித்திடும் கவிகளையும் , காதல் கொன்டேன் . கவியே ..! எனக்கு கற்பனையை தர , எனக்கு பிடித்த விதத்தில் தாயை படைத்திட்டேன் . கற்பனை தாய் மடியில், அவள் விரல் என் கேசம் கோதிட , நிம்மதியான நித்திரை கிட்டியது .                          -- பிரவீணா தங்கராஜ் .   

நாத்திகன் ஆனேன்

நான் ஒன்றும் பிறவி நாத்திகன் அல்ல ... கண்ணெதிரே கோவிலில் , உன் வாசலில் தான். பிச்சை எடுக்கும் ஏழ்மையினை கண்டும். வைர மூக்குத்தி அணிந்து நீ ஜொலிப்பதும் ... கடைக்குட்டி கடா ஆடு கருப்பண்ணசாமி கோவிலை , நித்தம் நுறு முறை சுற்றி வந்தும் . உன் முண்ட கண் கொண்டு வேடிக்கை பார்த்தயே...! பலி கொடுக்கும் போது , கடைக்குட்டி கடா கதறியபடி உன்னையே பார்த்து , இரத்தாறு ஒட  உயிர் துறந்த போதும். நான் நாத்திகன் ஆனேன் ....              ---  பிரவீணா தங்கராஜ் .

அழைப்பாயா ...என் சிசுவே ...!

கை பிடித்த கணவனை விட -உன்னை நான் காதலிக்கிறேன்... நீ அந்த கருமை நிற கண்ணன் நிறமா? காதலை பறை சாற்றும் சிவப்பு நிறமா? தெரியவில்லை -இருந்தும் உன்னை நான் காதலிக்கிறேன்... நீ நல்லவனா அதற்கு எதிர் மறையா ஆனாலும் விரும்புகிறேன்... நீ ஆணா ...?  பெண்ணா... ? அது கூட தெரியா மடந்தை நான். கேளீர் கூட கேளிக்கை செய்கின்றனர் கட்டிய கணவனை விட, நீ இப்பொழுது விரும்பும் உயிர் பெரிதா என்று?! உண்மை தான்... நீ என்னுள் ஜனித்த நாள் முதல் உயிராய் உருகுகின்றேன் . நீ மொழியும் ஒற்றை சொல்லிற்காக அழைப்பாயா 'அம்மா 'என்று அந்த அழைப்பிற்காக உருவம் தெரியா உன்னை விரும்புகிறேன்... என் சிசுவே ...!                        --  பிரவீணா தங்கராஜ் .

உன் பார்வையால்...

கவிதைக்கு பஞ்சமடி பெண்னே ! உன் பார்வையை வீசிவிட்டு செல் ... ஆயிரம் கவிதைகளை படைத்திட ...                                                      -- பிரவீணா தங்கராஜ் .

மழைத்துளி

Image
                   ஒரு சொட்டு நீரில் கூட  அலையாய் பிரவேசிக்கும் என்னை வீணாக்காதீர்கள் ...                             இப்படிக்கு ,                           மழைத்துளி .                                                               -- பிரவீணா தங்கராஜ் .

பொல்லாத காதல்

                              இதயம் எனும் வீட்டினில் கண்கள் எனும் வாயிற்கதவினால் பூட்டினாய் ... மையல் எனும் ஜன்னல் வழியாக - உன்னில் தென்றலாய்  நுழைந்திடுவேன் .                                                            -- பிரவீணா தங்கராஜ் .