Posts

இலைகளை உதிர்த்தி...

Image
இலைகளை உதிர்த்தி மரங்கள் சொல்கின்றது இனியெல்லாம் இங்கு வசிக்க இயலாதென்று கனிந்த பார்வையில் கவிதை படித்திட காலங்கள் எல்லாம் மாறுகின்றதென்று உணர்வில் லயித்திட்ட உயிர்கள் இரண்டு உன்னத அன்பில் சொல்வதொன்று மனிதா அன்பை நாடி மரங்களை நடு இலைகள் இல்லா கிளைகள் சுவைகள் இல்லா கனிகள் நிலவை அள்ளி பருக மட்டும் ஜோடி குருவி நாங்கள் உண்டு   -பிரவீணா தங்கராஜ்.

முதல் முதலாய் ஒரு மெல்லிய (how to paper book buy it ?)

Image
முதல் முதலாய் ஒரு மெல்லிய           முதல் முதலாய் ஒரு மெல்லிய-1   முதல் முதலாய் ஒரு மெல்லிய-2   முதல் முதலாய் ஒரு மெல்லிய -3  முதல் முதலாய் ஒரு மெல்லிய-4   முதல் முதலாய் ஒரு மெல்லிய-5 முதல் முதலாய் ஒரு மெல்லிய-6  முதல் முதலாய் ஒரு மெல்லிய-7  முதல் முதலாய் ஒரு மெல்லிய-8  முதல் முதலாய் ஒரு மெல்லிய-9  முதல் முதலாய் ஒரு மெல்லிய-10  முதல் முதலாய் ஒரு மெல்லிய-11 முதல் முதலாய் ஒரு மெல்லிய-12 முதல் முதலாய் ஒரு மெல்லிய-13 முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 & 15 முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17 முதல் முதலாய் ஒரு மெல்லிய- 18 முதல் முதலாய் ஒரு மெல்லிய-19 முதல் முதலாய் ஒரு மெல்லிய-20 முதல் முதலாய் ஒரு மெல்லிய-21 முதல் முதலாய் ஒரு மெல்லிய-22 முதல் முதலாய் ஒரு மெல்லிய-23 முதல் முதலாய் ஒரு மெல்லிய-24 முதல் முதலாய் ஒரு மெல்லிய-25 முதல் முதலாய் ஒரு மெல்லிய-26 முதல் முதலாய் ஒரு மெல்லிய-27 முதல் முதலாய் ஒரு மெல்லிய-28 முதல் முதலாய் ஒரு மெல்லிய-29 முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31

🌹 உலகமே உதயம் எதனில் 🌹

பட்ட மரத்தின் வேருக்கு பூக்கள் பூக்க செய்ய பயோதரம் விடும் கண்ணீர் திவலை யெதற்கு....?! தன் கூட்டின் மேல தான் இடா முட்டைக்கும்  தாயாய் அடைகாக்கும் காகம் எதனால்...?! முட்டி மோதி கொள்ளும் உறவுகள் பந்தமெனும் கூடும் விழாவில் ஒன்றுபட்டு புன்னகைப்பெதனால்...?! பிடியள்ளி உண்ணும் சாதம் பிள்ளை வந்து முன்னிற்க பாசமாய் உணவளிப்பதும் எதனால்...?! எங்கோ கேட்கும் திரிவூர்தி ஓசையது எங்கோ மூலையில் ஒரு மனம் வேண்டிடுவதும் எதனால்...?! எதனால்... எதனால்... உலகமே உதயம் எதனில் தேடிட... அன்பே நீ கரைந்திடு  தாய் தந்தைக்காய்...! பாசமே நிறைந்திடு சகோதரத்துவமாய்...! நேசமே விதைத்திடு உறவும் நட்புமாய்...! காதலே கலந்திடு காவியமாய்...! உலகமே உதயம் அன்பில் - அதை உணர்த்தியே சொல் உன்னில்.                               -- பிரவீணா தங்கராஜ். பயோதரம்--மேகம் திவலை-----மழைத்துளி திரிவூர்தி---ஆம்புலன்ஸ்

பாலுமில்லை சீனியுமில்லை

Image
பாலுமில்லை சீனியுமில்லை இல்லாத குழவித் தூளில் சூடுப் பறக்க ஆற்றி எதிரிலும் யாருமில்லாத யிடத்தில் நீட்டியப்படி குழவியை தேனீர் என்கின்றாள் சிரிப்புடன் குட்டிமகள் வாங்கிப் பருகியவாறு   திருப்பி தருகின்றனர் உங்கள் கண்களுக்கு தெரியாத கடவுள்கள். -- பிரவீணா தங்கராஜ்.

மழலையின் மொழி...

Image
எண்களை அழுத்திவிட்டு இறைவனின் குறைகளை கேட்டு முடிக்கின்றாள் ஆறுதலாக மழலையின் மொழியால்... -- பிரவீணா தங்கராஜ்.

நாள்காட்டி அட்டை

நாட்களை விழுங்கியவன் மெலிந்து கிடக்கின்றான் நாள்காட்டி அட்டை.           -- பிரவீணா தங்கராஜ்.                  

bye bye 2018 welcome 2019

Image
இன்னுமொரு வாரமே என்னை விட்டுப் பிரிய போகின்றாய்...! நான் கலங்குவதாக யில்லை உன்னை சந்தித்தப் போது எத்தகைய ஆர்வம் கலந்து எதிர்பார்ப்போடு சந்தித்தேனோ... அதே ஆர்வத்தோடு வழியனுப்ப போகின்றேன் நான் தான் நானே தான் நீ எனக்கு கொடுத்த இன்பத் துன்பத்தையும்  அன்பும் அழுகையும் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் வித்தியாச அனுபவங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவான காதலோடு உன் பிரிவுக்கு தலை வணங்கியே பிரியா விடை தருகின்றேன் உன்னைப் போலவே எண்ணில் கலக்க வரவிருக்கும் இவ்வாண்டை அதே ஆர்வத்தோடு சந்திக்க தயாராகின்றேன்.            -- பிரவீணா தங்கராஜ்.

வரிகள் வடிக்கும் காதலி- காதல் பிதற்றல் 44

நிலவு பார்த்து கவிதை பேசும் கவிஞன் அல்ல உன் நினைவு எண்ணி வரிகள் வடிக்கும் காதலி நான்                     - பிரவீணா தங்கராஜ்.

காதல் பிதற்றால்-44

பிரபஞ்சத்தின் அத்தனை சந்தோஷமும் என்னிடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்னிடம் இல்லை அது எல்லாமே வெறுமை என்றே உரைப்பேன் நான் ஒன்றும் மேதை அல்ல உன் ஒற்றை சொல்லிலும் உன் ஓரப்பார்வையிலும் உன் மென்னகையிலும் உள்ளது எந்தன் பிரபஞ்சத்திற்கு ஈடான சந்தோஷம்...               - பிரவீணா தங்கராஜ்.

என் இறப்பு எவ்வளவோ - காதல் பிதற்றல் 43

உன் ஒற்றை மவுனம் உன் பார்வை திருப்பம் உன் புன்னகை துடைத்த முகம் இவையெல்லாம் இல்லாத உன்னை காண்கையில் என் இறப்பு எவ்வளவோ மேல்.                                - பிரவீணா தங்கராஜ்.

எந்தன் உயிர் தோழியே...!

எனக்கொரு நண்பி இருந்தாள்  எந்நாளும் துணையாய் இருந்தாள் எச்சி பண்டம் என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை எனலாம். மதங்கள் விழுங்கிய தோழமையே... மலர் போலவே பூஜித்தாள் தன்னலமில்லா ... துரோகமில்லா... நேர்மையானவள் தவறு செய்தால் சுட்டிக்காட்டவும் திறமையிருந்தால் தட்டிகொடுக்கவும் தவறாத தங்கநிலவுவள் எந்தன் மகிழ்வை விரும்புபவள் எந்தன் நலனை நாடுபவள் நாட்கள் எங்களை பிரித்தாளும் நினைவில் என்றும் நீங்காதவள்...                      --பிரவீணா தங்கராஜ் .

பூட்டி வைத்த காதலது

Image
என் இதயம் சென்று திரும்பும் உன் மூச்சுக் காற்று அறிந்தும் கூறவில்லையா உன்னிடம் ?! என் கண்கள் பார்த்துத்  திசையை மாற்றிக் கொள்ளும் உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?! உன் இதயத்திடம் கண்களிலிருந்து இதயத்திற்கு என் காதலை கடத்திச் செல்லும் இரத்தச் செல்களை பாதியிலே வழிமறித்து புறக்கணிப்பது யார் ? உன் மூளையா ? நித்தமும் என் தேடலை உணர்ந்தே உன் பாதையை மாற்றிடாது வந்திடும் உன் கொலுசொலி பாதம் உன் தடத்தை பின்பற்றும் என் வன்பாதம் செல்லுதே... பஞ்சபூத நிலமவன் கதைக்கவில்லையா ?! யார் தான் சொல்வது ? எந்தன் இரும்பு இதயத்திலும் பூட்டி வைத்த காதலது மென் பூவுடையாளானா உன்னை கண்டு சரணடைத்ததை....!                                  -பிரவீணா தங்கராஜ் .

விவசாயி மைந்தனே !

கையில் அலைப்பேசி கொடுத்து கொடுத்தே கவளம் சோற்றுக்கும் கையேந்து நிலையானது சேயே நீ அடியெடுத்து வைக்க தாயே உன்னை பற்றியபடி களமிறங்க நாற்றுகள் நீயெடுத்து சேற்றில் நட நெல்மணிகள் சொர்ணமாய் வளர்ந்திடுமே அயல்தேசம் கையேந்தும் உன்னிடம் அதுவரை பொறுத்திரு விவசாயி மைந்தனே !                           -- பிரவீணா தங்கராஜ் .

தேவதையாகவே...

Image
மந்திரக் கோலை கைகளில் ஏந்திவரவில்லை மண்ணில் தவழ தவழ வெண்ணிறக் கவுனை அணியவில்லை தலையில் ஒளிரும் கிரீடம் சூடிடவில்லை தக தகவென மின்னலாய் ஒளியும் சூழவில்லை மாயாஜால வித்தைகள் செய்திடவில்லை மந்திரச்  சொற்கள் உச்சரித்து கதைக்கவில்லை இருந்தும் என் கண்களுக்கு தேவதையாகவே...! ஆம் ... இறுகி பிடித்த உள்ளாடையை நாகரிகமென அணியாது கறிகளை கவ்வி ரத்தம் சொட்ட சொட்டவிருக்கும் நாயின் வாயை போல உதட்டு சாயம் பூசவில்லை ஒப்பனை என்ற பெயரில் முகத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவில்லை மென் புன்னகையோடு தேவதையாகவே... இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.                   - பிரவீணா தங்கராஜ் .

காற்றே மெல்ல வீசு

ஏய் காற்றே... நீயும் கார்ப்பரேட் காரர்களிடம் கை குலுக்கிக் கொண்டாயோ? கதிகலங்க வைத்துவிட்டாய்...! சற்றே மெல்ல வீசி சென்றிருக்க கூடாதா கஜா(யானை) எப்பொழுதும் அப்படித்தானே மெல்ல அசைந்து நடப்பாய்...! சில்லென்ற தென்றல் கீழ் குடிசை மீது காதல் அரும்பியதற்கா?! காற்றாகிய நீயும் எதிரியாய் மாறி அசுர காற்றாய் வீசி கூரைகளை கூண்டோடு அகற்றி விட்டாயே! தூணாக இருந்ததையா தென்னம் பிள்ளைகள் கருப்பையை அகற்றியது போல வேரோடு சாய்த்துவிட்டாயே! பூமி தாய் தேகம் அதற்கா ஏங்கியது போதும் கைப்பிடி அரிசி காண்பதே அரிதென காட்சி பொருளாய் பார்க்கும் காலத்திற்கு இயற்கையே நீயும் தள்ளாதே                             -- பிரவீணா தங்கராஜ் .