🩸-6 ஆரோல் அங்கே துர் ஆவியினை ஓட்டும் பாஸ்டர் வீட்டில் பெற்றவரோடு சென்று தனக்கு நடந்தவையும், அவர்களுக்கு நடந்தவைகளையும் சொல்லி, தங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றுகின்றதென கேட்க, பாஸ்டரோ ''இது ஒரு ஜென்மத்தின் தொடர்புகளாக இருப்பின் தங்கள் செய்த பாவ புண்ணிய கணக்கில் கடந்த ஜென்மங்களில் ஏதேனும் தவறு செய்து அதன் காரணமாக தோன்றலாம். ''கடந்த காலத்தின் நடந்தவை என்ன என்பது நான் அறிய இயலாதவை. வேண்டுமெனில் உங்களுக்கு பாதுகாப்பு மந்திர ஜெப கயிரை தருகின்றேன். அதை அணிந்து கொள்ளுங்கள் பெரிய பாதர் வெளியூர் சென்றிருக்க அவர் வந்தபின்ன கேட்டுக்கலாம். முடிந்தால் போன ஜென்மத்தின் பாவங்களுக்கு ஒரு மன்னிப்பு கோரி ஒரு பிரேயர் செய்து கொள்வோம். பழி தீர்க்க வெறியோடு இருக்கும் அந்த ஆன்மா ஒரு வேளை மனம் இறங்கலாம்'' என்றே முடித்திட ஜார்ஜ் மேரி ஆரோல் மூவரோடு ஒரு சின்ன பிரேயர் வைத்து மண்டியிட்டு வணங்கி ஜெபித்தனர். கண்கள் மூடி இருக்க சிறிது நேரம் ஜெபித்தனர். அதில் யவனரதியாக மெர்லின் இளவரசி தோரணையில் கோவிலின் முன் அமர்ந்து எதையோ பருக, சில நொடிகளில் மெர்லின் அதாவது யவனரதி மயங்கி தள்ளாடினாள்