சிரமமில்லாமல் சில கொலைகள்-9
🩸-9 சர்வேஷ் தன் கை அடிக்கடி சில்லிட்டு இருப்பதை உணர்ந்தான். என்னவோ தனக்கு இது புதுவுணர்வாக இருக்க, நிம்மதியும் கொண்டது மனம். சாந்தனு ஓரபார்வையோடு அவனருகே வந்தமர்ந்தான். "என்னடா... ஒரு மார்க்கமா இருக்க? கொலை செய்ய இன்னமும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று கேட்டு முடித்தான். "நீ தான் பேலன்ஸ்..." என்று சர்வேஷ் கோபமாக சொல்லி முடித்தான். "பின்ன என்னடா... ஒன்றா... இரண்டா... கொலைகள். லிசா அவ பேரண்ட்ஸ். அப்பறம் இரண்டு பேர் ஒன்னா போட்டு தள்ளியது. சேர்த்தா ஐந்து பேர் ஆகுது. ஆமா... லிசாவை டச் பண்ண பார்த்ததா சொன்னியே ஆடலரசன்.... அவனை கொன்றுட்டியா?" என்று கேட்கவும், "பச் அவனும் என்ன ஆனானு தெரியலை பா. ஏய்.. என்ன சொன்ன.... நான் கொன்றேனா... அடப்பாவி... போற வர்ற நேரம் யார் காதிலாவது விழுந்தது சந்தேக கேஸ்னு உள்ள தள்ளிட போறாங்க டா. நான் பச்சை மண். அந்த கருப்புபுகை இளவழகன் தான் கொல்லறான். நீ என்ன என்னவோ நானா போய் கொல்லற மாதிரி பேசற. பார்த்து டா... பீச்ல எவனாவது மப்டி போலிஸ் இருக்க போறாங்க." என்று பயந்தான் சர்வேஷ்.