💧கண்ணீர் 💧
இன்பத்தில் இன்சுவை யூட்டும் இனிப்பும் மில்லை... துன்பத்தில் பங்கெடுக்கும் கசப்பும் மில்லை... உன்னில் வழிந்திடும் சுவையோ உவர்ப்பு 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி உவர்ப்பு சுரக்கும் நீரில்லா வாழ்வுமதுவே பிறப்பிலும் வருவாய்... இறப்பிலும் வருவாய்... இடைப்பட்ட வாழ்விலும் பங்கு கொள்வாய்...! எண்ணிலடங்கா சோகமிருக்கும் தனிமையிலும் துணை ஆவாய்...! மகிழ்ச்சியென்ன வாட்டமென்ன வழிந்திடவே செய்வாய்...! அன்பெனும் ஆளுமைக்கு அடிபணிந்தே வந்திடுவாய்... ! எந்தனருவி கண்ணீரே...! -- பிரவீணா தங்கராஜ் .