Posts

💧கண்ணீர் 💧

இன்பத்தில் இன்சுவை யூட்டும் இனிப்பும் மில்லை... துன்பத்தில் பங்கெடுக்கும் கசப்பும் மில்லை... உன்னில் வழிந்திடும் சுவையோ உவர்ப்பு 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி  உவர்ப்பு சுரக்கும் நீரில்லா வாழ்வுமதுவே பிறப்பிலும் வருவாய்... இறப்பிலும் வருவாய்... இடைப்பட்ட வாழ்விலும் பங்கு கொள்வாய்...! எண்ணிலடங்கா சோகமிருக்கும் தனிமையிலும் துணை ஆவாய்...! மகிழ்ச்சியென்ன வாட்டமென்ன வழிந்திடவே செய்வாய்...! அன்பெனும் ஆளுமைக்கு அடிபணிந்தே வந்திடுவாய்... ! எந்தனருவி கண்ணீரே...!                  -- பிரவீணா தங்கராஜ் .

எந்தன்னாடு செல்வதெங்கே...

செல்வதெங்கே... எந்தன்னாடு செல்வதெங்கே... சொல்லி செல்லுங்கள் மனிதக் கூடுகளே... மனிதக் கூடுகளே... நெஞ்சிலாயிரம் கேள்வியுண்டு நேரடி கேள்விகள் பல உண்டு கேட்டிடவா... வரியில் கேட்டிடவா... மக்கள் குரலும் அதிலுண்டு சலித்து போன நியாயங்கள் தான் . வந்தவரெல்லாம் அள்ளிச்செல்லவா ஆட்சி நடக்குதிங்கே  பணத்தை அள்ளிச்செல்லும் ஆட்சி நடக்குதிங்கே    ( செல்வதெங்கே ....) மாற்றங்கள் நல்கிட மக்களும் ஏங்கிட புது விடியலை தேடியே ஏங்குகின்றோம் மாக்களாட்சியில் மக்கள் மட்டுமே கோமாளியாய்... என்றும் மக்கள் மட்டுமே கோமாளியாய் ... மறதிக்கு கூட நல்லது செய்ய ஒப்பில்லையா மனம் ஒப்பவில்லையா ...  ( செல்வதெங்கே ...) கடலில் மீனவர்கள் மாண்டாலென்ன மண் வளங்கள் அழிந்தால் தான் யென்ன மது அருந்தவும் வசதி படைத்து  கொடுத்திடவே இடம் மட்டும் போதுமே ...உங்களுக்கு இடம் மட்டும் போதுமே ... ஒரு நீதியில்லை ஒரு நியாயமில்லை மலையளவு பணம் மட்டும் புரட்டிடவே வந்தீரோ மாயங்கள் நடந்திட , மாற்றங்கள் நிகழ்ந்திட காமராஜ ஆட்சி மீண்டும் கண்டிடவே மாட்டோமா மீண்டும் கண்டிடவே மாட்டோமா...    ( செல்வதெங்கே ...)                        

நீ எனக்கு நட்பா ?! காதலியா ?!

உயிர்வதை செய்யும் பெண்னே... தோள் மீது சாய்கையிலே தோழியானாய்... கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்... கண்களில் கவிபாடும் காதலியே... கதைப் பேசி கதைத்திடும் தோழியே... மூளைக்கு தெரிகிறது நீ தோழியென இதயத்திற்கு புரிகிறது காதலியென நீ தோழியா... காதலியா... பெண்னே மண்டியிட்டு கேட்கின்றேன் மறவாது சொல்லடி தோழமையில் காதல் கூடாது காதலில் தோழமை உண்டு உணர்ந்தே சொல் நான் யாரென .               -- பிரவீணா தங்கராஜ் .

வினாவிற்கு விடை...

ஒரு ஊரில் அழகியொருத்தி இருந்தாளே ஓர் நாளில் நடைப்பாதை கடந்தே சென்றாளே விழியெங்கும் கண்டது பசுமையில்லா பூமியே விழிமூடி உறங்குகையில் கடவுள் வந்தாராம் வரமொன்றும் வேண்டாமே வினாவிற்கு விடைதா என்றாளாம் வளி கூட அசுத்தத்துடன் பூமியினை ஏன் படைத்தாய்...! பொங்கும் அருவியும் எங்கும் செழுமையும் நான் படைத்தேன் பொல்லாத மனிதன் பாழாக்கி போனான் என் செய்வேன் தோழியே.... மீண்டும் பசுமைதழைத்திட என் செய்ய வேண்டும் இறைவா ..! மண்ணில் ஏர் உழுதிடும்  மைந்தனை மணம் புரிவேனென சபதமிடு என் மங்கையே...  பதிலளித்து மறைந்தார் இறைவனே விழித்ததும் தந்தையிடம் கூறினாள் விவசாயம் படித்த மாப்பிள்ளை பாருங்கள் போதுமென்று .                        -- பிரவீணா தங்கராஜ் .

என் மரணத்திற்குப் பிறகு...

என் மரணத்திற்குப் பிறகு ...என்ன நிகழும் கண்மூடியே யோசித்தேன் மண்மூடி புதைப்பனரோ ? எரிப்பனாரோ ? நான் உணர போவதில்லை ஏதோவொரு அமைதி எண்ணில் நுழைந்தது அதுதான் மயான அமைதியோ ? ஏதோவொன்று இலகுவாக உணர்த்தியது  நானெனும் உடல் , என் குடும்பம் , என்யுடமை என் உறவு என்பதெல்லாம் அழிந்தே போனது நிலையற்று சிறகு முளைத்த மனிதனாக ஆத்மா பரந்த உலகை பார்த்துக் கொண்டது எங்கும் கொலை, கொள்ளை, திருட்டு மனிதநேயமற்ற செயல், ஜாதியென பிரித்தே இறைந்துகிடந்தனர்  பார்க்க திறனின்றி நான் ஆத்மாவாக இ(ற)ருந்து விடுகின்றேன் எங்கோ இழுத்து செல்கின்றன காற்று அதனிடம் கேள்வி கேட்காது பயணித்தேன் அங்கும் இருதரப்பு உலகம் சொர்க்கம் நரகமென்று பாவபுண்ணிய கணக்கினை கணக்கிட்டு இங்கு யார் கணக்குபதிவாளர் வேலைப் பார்ப்பதோ ? என்ற கேள்வி தான் எழுந்தது - அதை விட அடுத்த பிறவியுண்டா இல்லையாயென்ற ஆவலையும் தான் 'ட்ரிங் ட்ரிங்' யென்ற அலாரயோசை செவிமடல் தாக்க கண் விழித்தேன் கனவு... எல்லாம் கனவு... இறுதிவரை தெரியாமலே போனது அடுத்த பிறவி உண்டா !? இல்லையா ?!                                 -- பிரவீணா தங்கராஜ் .

எந்தன் தமிழ் நாட்டில் ...

தோட்டாக்கள் தழுவிய தேகம்குருதி வழிந்த மேனியென்று இறக்கும் தருவாய் நொடிகளிலும் கடக்கின்றேன் எதிரி நாட்டிலிருந்து எந்தன் தாய் மண்ணில் மடி சாய்ந்து உயிர் நீத்திட இமைகள் கூட கண்ணிற்கு பாரமாக மாறிக்கொண்டு இரு(ற)க்கும் தருவாயில் சிறகு முளைக்க இறைவனிடம் யாசிக்கிறேன் பறந்தாவது பசி தூக்கமின்றி பாதகமின்றி உயிரை நாட்டிற்கு பரிசாக்கியது போல உடலையும் பரிசாக தர முயல்கிறேன் எந்தன் கண்ணும் , இதயமும் யாருக்கேனும் பயன் பெற வேண்டுமென்று எந்தன் நண்பர் கூட்டம் கண்டு கொண்டால் நறுக்கு தெறித்த திருக்குறள்வரி போல செப்பிடுவேன் தானம் செய்திடுங்கள் எந்தன் கண் இதயத்தையென்று மீண்டும் பிறப்பேன் மறுஉருவத்தில் எல்லையில்லா வளத்திலும் வளங்களும் தன்னில் கொண்ட தமிழ் நாட்டில் ...               -- பிரவீணா தங்கராஜ் .

ஏதோ நினைத்து...!

ஏதோ நினைத்து தவிக்கின்றேன் என்னில் உன்னை சிறை வைத்தேன் கண்ணில் உன்னை காண்கின்றேன் கவிதை இசைத்தே கதைக்கின்றேன் கனவில் நீ வர துடிக்கின்றேன் கவலைகள் உன்னில் மறக்கின்றேன் காதல் இதுயென அறிகின்றேன் எதையும் அறியா உன் மனதோ என்னில் புன்னகைத்தே பேசிடுதே நாளும் புன்னகைத்து பேசினாலும் வாழும் எந்தன் மனசாட்சி மண்ணில் புதைந்திடும் முன்னாலே மனதை இருப்பதை சொல்லிடுவேன் என்றே சூளுரைத்து தவிக்கிறதே                        --  பிரவீணா தங்கராஜ் .

நான் நானாகவே

நான் நானாகவே இருந்து கொள்கின்றேன் உனக்காக மாறி மாறியே என் சுயத்தை இழந்து விடுகின்றேன் போதும் நான் நானாக இருந்த போது எதற்காகவும் கவலை கொண்டதில்லை கலங்கியதும் இல்லை புன்னகை மட்டுமே முகத்தில் வீற்றிருக்கும் நீண்ட நேர காத்திருப்பும் ஏமாற்றமும் நீ பேசவில்லை யென்ற தவிப்பும் இருந்ததில்லை உந்தன் கோபம் எந்தன் இதயத்தை சுடவில்லை உந்தன் மவுனம் கூட தாக்கியதில்லை அதனால் நான் நானாக இருக்கின்றேன் அப்படியே என்னை ஏற்க முயன்றிடு !                                         -- பிரவீணா தங்கராஜ் .

என் நாட்குறிப்பில்...

என் நாட்குறிப்பில் உன்னை பற்றி எழுதப்பட்ட இடங்களை விட எழுதப்படாத பக்கங்களே அதிகமாக இருப்பதாக தாள்கள் நினைத்திருக்கும் அதற்கு தெரியாது தாளின் மையுன்றி எழுதப்படாத நினைவுகள் என் இதயத்தில் வேரூன்றி இருக்குமென்று...               -- பிரவீணா தங்கராஜ்

என் உயிர் நீ...

நிச்சயித்த நாள்முதல் என்னைப் பார்க்க துடித்தவன் நீ - இன்று கண் பார்த்துப் பேச மறுக்கிறாய் ..... அலைபேசியில் நித்தம் என் குரல் கேட்க துடித்தவன் நீ - இன்று மவுனம் மட்டுமே பேசி செல்கின்றாய் ..... நித்தம் நூறு முத்தம் கேட்டவன் நீ - இன்று ஆயிரம் கொடுத்தும் வாங்க மறுக்கிறாய் ..... ஊசியொன்று விரலில் பட துடித்தவன் நீ - இன்று கண்கள் குளமானாலும் காணாது செல்கின்றாய் ..... ' செல்லம் ' 'பாப்பா ' ' டார்லிங் ' 'டியர் ' என அழைத்தது நீ - இன்று பெயரிட்டு கூட அழைக்க மறந்தாய் ..... காலை வணக்கத்தை ஐந்து மணிக்கே கூறி இரவு வணக்கத்தை இரண்டிற்கு கூட கூறாது தொலைபேசி குறுந்செய்தியை நிரப்பினவன் நீ - இன்று சாப்பிட்டாயா என்றும் கேட்கவும் யோசிக்கின்றாய் ..... ஊடலில் தொடரும் காதலில் ஊடல் தணிந்து வெட்கம் படர செய்தவனும் நீ - நீ இன்றி உலகம் இல்லை என்று எப்பொழுது உரைப்பவனும் நீ ...நீ...நீ...                        -- பிரவீணா தங்கராஜ் .