ஸ்டாபெர்ரி பெண்ணே- 21
🍓 21 இன்று வரவேற்பு என்றதும் எங்கிருந்து தான் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. ''செல்வா எனக்கு யாரையும் தெரியாது..... நான் தனியா என்ன செய்வேன்'' ''நீ எப்படி தனியா இருப்ப உன் செல்வா உன்கூடவே இருப்பேன்'' ''இல்லை உங்கள தெரிந்தவர்கள் வந்ததும் பேசுவ.. வாழ்த்து சொல்லுவாங்க... நீ அவங்களை கவனிப்ப...'' என்றே பேசிக்கொண்டு போனவள் இதழில் கையினை வைத்து ''ஜெஸில் இந்த உலகத்திலே எனக்கு நீ தான் முக்கியம் ஜெஸில் உன்னை தனியா விட்டுட்டு எப்பவும் வேடிக்கை பார்க்க மாட்டேன்...'' ''நிஜமா...'' என்றே கேட்க ''ஹ்ம்ம் என்றே நெற்றியில் இதழ் ஒற்றினான். ஆராதனா என்ன நினைத்தாளோ அவனின் நெஞ்சில் சாய்ந்து இமையை முடி நின்றாள். நாழிகை நகர ''ஹுக்கும்..'' என்றே கரகர குரலில் சுந்தர் செருமிக் கொண்டே வர ஆராதனா விலகி நின்றாள். ''சார் எல்லாம் ரெடி நீங்க சிஸ்டர் வருவது தான் பாக்கி.... என்றே சொல்ல ஆராதனா கையை பற்றியே நடந்தா