நீ என் முதல் காதல் -20
அத்தியாயம்-20 ம்ருத்யுவுன் இதழ் முத்தம் மனதை அமைதிப்படுத்தியதென்றால் அவன் கைகள் முன்னேறியதில் மூளை விழித்துவிட்டது. ம்ருத்யுவை தள்ளிவிட்டு, "நோ ம்ருத்யு ஐ கான்ட். ப்ளீஸ் ம்ருத்யு ஐ நீட் எ ஸ்பேஸ். எனக்கு ஜீவியோட பேசணும்." என்று அதிவேகமாக உரைத்தாள். மலர் இதழ் முத்தமெடுத்த வண்டு இனத்திற்கு அடுத்த கட்டம் செல்லாமல் ஏமாற்றம் கொண்டது. அதனால் "ஜீவியை ஒருவேளை சந்திச்சா அவனோட போயிடுவியா?" என்று வார்த்தைகளை விழுங்கினான். "ஏன் ம்ருத்யு உன் சாப்ட் நேச்சரை தொலைக்கிற? இனி ஜீவியே நல்லவன்னு முன்ன வந்து சொன்னாலும் நான் எப்படி அவனோட போகமுடியும்? அப்பாவுக்கு தலைக்குனிவாகாதா? எங்கம்மாவுக்கு தலைக்குனிவு செய்யணும்னு ஆசைப்படுறவ நான். ஆனா எங்கம்மா எங்க அப்பாவோடயும் என் அன்புக்கும் தான் அடங்கணும்னு ஆசைப்படுவேன். அடுத்தவங்க முன்னிலையில இல்லை. ஜீவி வந்தா ஏன்டா இப்படி செய்தனு காரணம் கேட்டுப்பேனே தவிர அவனோட வாழ ஆசைப்பட மாட்டேன். ம்ருத்யு நீ என் பிரெண்ட். இனி கணவனா அக்சப்ட் பண்ணிப்பேன். இப்ப முத்தத்தோட புறக்கணிக்கறேன். இதோட அடுத்த கட்டம் அப்ப மனசார தருவேன். இப்