சிரமமில்லாமல் சில கொலைகள்-7
🩸-7 மெர்லின் தனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்து யோசனையில் முழ்கினாள். "என்னாச்சு...?" என்று தபித்தாள் கேட்டு முடிக்கவும் திரும்பியவள், "நீங்களும் என்னோடவே வரலாமே. எதுக்கு தனியா போகணும். அதுவும் இல்லாம அங்க யாரையும் தெரியாது." என்று மெர்லின் கூறினாள். கிறிஸ்டோபர் ஒரு அட்ரஸை நீட்டி, இது ஜாஸ்மின்... லாஸ்ட் இயர் இங்க வந்தப்ப, பழக்கம். நமக்கு இண்டியாவில் யாரையும் தெரியாது. அதனால ஜாஸ்மினுக்கு ஊரைச்சுற்றி பார்க்க போறதா சொல்லியிருக்கேன். உண்மையும் அது தான் என்றாலும். இங்க நடக்கற விசித்திர நடவடிக்கையில் நீ அங்க போறது தான் நல்லது. இங்க இருக்கற அலுவலக பணியை பார்த்து முடித்து தான் நாங்க வரணும். அதுவரை தனியா மேனேஜ் பண்ணிக்கோ." என்று கூறவும் அந்த அட்ரஸை எடுத்து படிக்க துவங்கினாள். ஜாஸ்மின் போனமுறை வந்தப்ப நல்ல பழக்கம். சர்சிற்கு வந்தப் பொழுது கர்த்தரின் புகழ் பேசி பரப்ப வந்தவள். மெர்லினை விட சற்று பெரியவள். அதனாலோ என்னவோ காதல் திருமணம் இத்யாதிகளில் வெறுப்பு தான். அதனாலே கர்த்தரை பற்றி புகழ் பாடி அவரின் பெருமையை பரப்புபவள். மெர்லினு