Posts

பிரியாதே என்னுயிரே

விண்ணிலிருந்து வந்த அன்புத்தாரகை நீ வையகம் புகழும் குணப்பேரழகு நீ மதங்களும் ரணங்களும் வந்தாலும் மனதினில் பட்டாம்பூச்சி உன்னால் தள்ளி செல்லாதே காதலை தள்ளாதே மழைக்கால தேனீர் நீ யெனக்கு நிமிட நேர பிரிவையும் நீங்க மறுக்குது என்னிதயம் நேசங்கள் தந்தவளே என்னுயிரே பிரியாதே                 -- பிரவீணா தங்கராஜ் .

ஒரு பக்க கதை - கோழையின் மரணம்

Image
     கோழையின் மரணம்                                                      சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது.        ''போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்'' என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு 'இனி பேச வேண்டாம்' என அன்பு கட்டளை விடுத்தாள்.       ''என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி'' என பெரு மூச்சு விட்டு வெளியே கிளம்பினார்.                                 அம்பிகையும் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு தெளிவுப் பிறக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.        'சே! யாரும

பெண்ணிவள் முதிர்க்கன்னி

Image
நெஞ்சில் காதல் பொங்கி வழிந்ததால் வஞ்சியிவள் தனியே நடந்தாள்  கன்னியவள் மனம் அறிந்த ஏடு... கரம் பற்றி கதைப் பேசும் அவனது சுவடு வையகம் கண்ணில் வரமறுப்பாய்... காரிருள் நித்திரையில் கனவில் வருவாய்... முகமது நீ காட்ட மறுக்கின்றாய்... அகமது உன்னிடம் அடிமைக் கொள்வதாய்... பகலவனைப் போல வதைக்காதே... பனிமழையாய் எண்ணில் கலந்திடவா ! நினைவில் கனவில் உன்னை எண்ணி நித்தம் தொலைக்கின்றது என் தனிமை புரவியில் அமர்ந்து நீ வருவாயோ... தரணியில் வந்து கால் பதிப்பாயோ... பெண்ணிவள் முதிர்க்கன்னி யென்பதை உடைத்து உன்னவள் என்பதை உலகுக்கு காட்டு .                                       -- பிரவீணா தங்கராஜ் .

புரியாத புதிர் அவள்

Image
புரியாத புதிர்களின் தனக்குள் கொண்ட பெண்ணினம் முடிச்சுகளோ அவளுள் ஏராளம் தங்க பஸ்பம் பூசிய ஒளிர்வு மேனியவள உள்மனம் அறிந்தால் மட்டுமே விளங்கும் அகராதியவள் சிப்பியாய் மூடியிருக்கும் விழிக்குள் முத்தாய் மிளிரும் அறிவு சுடர் அவள் .                                 --- பிரவீணா தங்கராஜ் .

நீதி தேவதை

நீதி தேவதை எங்கே நியாயத்திற்கு  கண் திறந்தால் தன்னையும் வன்புணர்வு செய்திடுவார்களோயென அஞ்சிக்  கையில் நியாய தராசை ஆயுதமாகயேந்தி சர்வ ஜாக்கிரதையாக இருக்கின்றாள் .😠          -- பிரவீணா தங்கராஜ் .

பாட்டியின் பால்யம்

Image
பாட்டியின் பால்யம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

குழந்தையின் மணல் கோட்டை

Image
                        ஆழி அருகே வடிவாய்... சோழி பொருக்கி சித்திரமாய்... கள்ளமில்லா பிள்ளை உள்ளம் இல்லம் ஒன்றை கட்டிடவே காற்றும் இதமாய் வீசியதோ... காவலாய் கரம் பற்றியதோ... கனவு என்றே நினையாதே காலம் சொல்லிடும் நிஜமாக காத்திரு அதுவரை கடலலையே. . .                            -- பிரவீணா தங்கராஜ் 

தோழிகளின் வட்ட மேஜையில்

சுருக்கென்று வந்திடும் சினங்களெல்லாம் எங்கே தான் சென்றிடுமோ ! மனதை மறைத்து பேசிட வேண்டுமென்று எண்ணங்கள் எல்லாம் தோன்றாதது ஏனோ ! நாழிகள் நொடிகளாக மாறிடும் விந்தைகள் இங்கு தானோ ! ஆயிரம் கிண்டல் கேலி செய்திட்ட போதும் புன்னகையோடு பேசிடும் முகங்கள் தானோ ! குழந்தை குட்டி குடும்பம் யென இத்யாதிகளை சிறிது நேரம் விட்டுவிட்டு நாம் நாமாக வாழ்ந்திட்ட நேரம்தானே  ! தோழிகளின் வட்ட மேஜையில் .

உயிர் மீட்கும் காதல்

ஒரு வாரம் ஓடிப்போனது அச்சண்டையின் பாதிப்பு இருவரும் பேசாமடந்தையாக  உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து எப்பொழுது பேசுவாயென சிறு இதயம் ஏங்கியே தவித்து நீண்ட மனப்போராட்டத்திற்கு பின் உன் கம்பீரத்திற்கு குறைவு வந்திடாது ஒரு வழியாய் மவுனத்திற்கு விடை கொடுத்து உன்னிடமே கேட்டு விட்டேன் எப்படி உன்னால் மட்டும் என் பார்வையை புறக்கணித்து என் மேனியை தழுவாது என் மூச்சை சுவாசிக்காது எப்படி இருக்க முடிகின்றதென்று நீயோ என் கண்களை ஆழமாகப் பார்த்து சுவாதீனமாக கூறுகின்றாய் உயிரற்ற உடலுக்கு என்ன தெரியும் நீ பேசிய பின்பு தானே உயிர் வந்தது என்கிறாய்...                       பிரவீணா தங்கராஜ் .

மெழுகானாய் பெண்ணே...

Image
வலிகள் நிறைந்த வாழ்க்கையடி பெண்ணே...! துன்பங்கள் களைந்திடும் வித்தையறிவாய் கண்ணே...! உடல்வலிமை உன்னிடமில்லை யென்றால் யென்ன அகவலிமை ஆட்கொள்ளும் இறையும் நீயே...! தாயாய் தமக்கையாய் மனைவியாய் மகவாய்.. தன்னலம் பார்க்காது வாழும் தாரகையொளியே..! சுடராய் நீயொளிவீசி வெளிச்சம் தர  , சுற்றுதடி மண்ணுலகம் யுன்னை போற்றியே...!                                  -- பிரவீணா தங்கராஜ் .

பிரபஞ்சம் நீயே...

Image
பச்சை பசுஞ்சோலை நந்தவனத்தில்  பாவை யென்னுயிராய் வந்தவளே...! பிரபஞ்சம் நீயே என்றுணர்ந்து பாதம் மடித்தே கை பற்றுகின்றேன் விண்ணிலிருந்து வந்த தேவதையே...! வையத்தில் வாழும் தாரகையே...! வெய்யோனின் கதிரொளி சாட்சியில் வேந்தனான் மணம் புரிய ஆசைக்கொண்டேன் தாமரை வண்ணாடை நீயுடுத்தி தாமரையாய் யென்மனதை சிதைத்ததென்ன தாமரை மலர் கரத்தில் மொட்டாய்... தவிக்கிறது யென்னிதயம் இதழ் பதிக்க புன்னகை மிதமாய் வீசி விட்டாய்... புவிதனில் எந்தன் பாதம் சிறகிட்டது பூவிதழ் மெல்ல நீ திறந்து புதிரை விடுத்திடு மையல் சொல்லியே...!                                                      -- பிரவீணா தங்கராஜ் .

மீண்டும் ஒரு தாஜ்மஹால்

Image
தாஜ்மஹாலின் அழகைக்காண மும்தாஜே வருகை என்னவளின் எழிலில் உயிர் ஓவியமாய்...!                                     -- பிரவீணா தங்கராஜ் .

என்னை சிலையாக்கி விட்டாய்- காதல் பிதற்றல் 37

நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு தொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கி விற்புருவத்திற்கு வாள் போல்  கூர்தீட்டி துள்ளும் விழிகளுக்கு மையிட்டு கண்ணாடி வளையல் சப்தம் எழுப்ப முத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தே முகம் நிறைய புன்னகை பூசி நின்று வெள்ளி கொலுசொலி சினுங்க உன்னிடம் வந்து நின்றேன்  நீ சிலையாக நீயோ சாதாரணமாக கேசத்தை கலைத்து பெயருக்கு வாரியப்படி ஒற்றை கைக்கடிகாரத்தை உந்தன் இடது கையில் கட்டியவாறு மொத்த கம்பீரத்தையும் அழகையும் உனக்கே சொந்தமாக்கி என்னை சிலையாக்கி விட்டாய்...!                         -- பிரவீணா தங்கராஜ் .

பணிப்பெண்

மிக பிடித்த வண்ணங்கள் கொண்ட ஆடைகளை பரப்பி மெல்ல மெல்ல தொட்டு பார்த்து பார்த்து ரசித்து விலைப்பட்டியல் போடுமிடத்திற்கு அனுப்பிவைத்தாயிற்று இனி அடுத்த வாடிக்கையாளர் வரும் வரை கலைந்த புத்தாடையை தன் தோளில் பின் குத்தியே கிழிச்சலை அடைந்த நிறமிழந்தயாடையை  மறைத்த படி மடித்து வைத்து சில ஏக்கத்தையும் வறுமையையும் புதைத்தே அடுத்த வண்ணயாடையை  எடுத்துக் காட்ட தயாரானாள் பணிப்பெண்.                                -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்ல மறந்ததை

ஏதோவொன்றை சொல்லாமல் விடுத்து சென்றாய்...! எண்ணிலடங்கா எண்ணத்தை விதைத்தே சென்றாய்...! நீ சொல்ல மறந்ததை நினைத்து நினைத்து நீ சொல்லி யிருக்கலாம் யென்று தவித்து நினைவுக் கோப்பையில் மருகி லயித்து நித்திரையை தள்ளி வைத்து போராடுகிறேன் தினம் தினம் சித்திரவதையாய்...!                          -- பிரவீணா தங்கராஜ் .